Thursday, November 25, 2021

நீதிமன்றப் பூனை

 நீதிமன்றப் பூனை - 25.11.2021


மீதிக்கு தவிக்கிறது ஒரு வெள்ளைப்பூனை வெளியே.

நீதிக்கு தவிக்குது ஒரு கூட்டம் கருப்பு பூனை உள்ளே....

Tuesday, August 10, 2021

ஒரு சிறு உரையாடல் - திருவள்ளுவரைப் பற்றி....

 [11:46 AM, 7/29/2021] Hong Kong Somu Annan: "ஆதிபகவன் முதற்றே"   "ஆதிபகலவன்"   இதில் எது சரி ? இதுவரை உரை எழுதிய யாரும் ஏன் பகலவன் என்று பொருள் கொள்ளவில்லை ?

[11:55 AM, 7/29/2021] RM S Viswanathan: ஆதி பகவன் என்பதே சரி..... இதுவரை உரை எழுதியவர்கள் எல்லாம் பகவன் என்றே எழுதியுள்ளனர். 

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து – குறள் 1 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு 

மு.வ விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. 

சாலமன் பாப்பையா விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. 

கலைஞர் விளக்கம்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

[12:14 PM, 7/29/2021] Hong Kong Somu Annan: பகலவன் என்று சூரியனையும், நீரின்றி அமையாது உலகு என்பதில் வருணனையும் பொருள்படக் கூறியிருந்தாரேயானால் வள்ளுவர் ஒரு இந்து தானே ?

[12:37 PM, 7/29/2021] RM S Viswanathan: இந்த கோட்பாடு சிரமண மதங்களிலும் உண்டு. இவர் இந்துவா, ஆசீவகரா, சமணரா அல்லது புத்தம் சார்ந்தவரா என்ற ஒரு பெரிய ஆராய்ச்சி இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. 

திருவள்ளுவரும், சமயமும்

திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.

திருவள்ளுவரும், சைவமும்

திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், ‘திருவள்ளுவர் சித்தாந்த சைவர்’ எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.

அயோத்திதாசரும் தன்னுடைய திருவள்ளுவ ஆராய்ச்சியில் திருவள்ளுவரை சமண மதத்தவராகவே காண்கிறார். மேலும், திருவள்ளுவர் தனியாக தந்து உள்ள ஊழ் என்னும் அதிகாரமும் ஒரு காரணம். 

அறத்துப்பாலில் வள்ளுவர் மூன்று இயல் வைத்து உள்ளார். அதில் இல்லறவியலுக்கு 20 அதிகாரமும், துறவறவியலுக்கு 13 அதிகாரங்களும், ஊழியலுக்கு ஒரே ஒரு அதிகாரமும் தந்து உள்ளார். 

ஆனால், அவர் எச்சமயமோ, அவரின் குறள் இப்பொழுதும், படிக்கும் தோறும் புது புது அர்த்தத்தை காலத்திற்கு தகுந்தார் போல் தந்து கொண்டு இருக்கிறது.

Thursday, August 5, 2021

திருக்குறளும் தலைமைத்துவமும் 2

 Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of Aug 2021

திருக்குறளும் தலைமைத்துவமும் 2

ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத்திறனை வளர்க்க அற்புதமான விளக்காக இருப்பது நமது திருக்குறள். திருக்குறள் ஒன்றை ஒருவன் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால் அது தரும் ஞானம் அளவிட முடியாதது. இதைப்போல் ஒரு உயர்வான ஒப்பற்ற இலக்கியம் வேறு எங்கும் கிடையாது. மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாதக் கருத்துச் சுரங்கம். இலங்கை ஜெயராஜ் என்ற பேச்சாளர், அடிக்கடி குறிப்பிடும் ஒன்று, "தமிழைப் படிக்க வேண்டுமா? திருக்குறளை படி. தெய்வத்தை படிக்க வேண்டுமா? திருவாசகம் படி" என்பதே. எவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான புத்தகங்கள், திருக்குறளும், திருவாசகமும். 

"அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".

ஒரு தலைவனுக்குத் தேவையான முக்கியமான பண்புகளில் அஞ்சாமை ஒரு முக்கியமான பண்பு. எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பது. அல்லது நினைத்த காரியத்தில் நாம் அஞ்சாமல் துணிவுடன் இருப்பது முதல் பண்பாகும். ஈகை என்ற வார்த்தைக்கு தற்போதைய சூழ்நிலையில் ஞானம் தர்மம் என்ற இரண்டு பொருள்களையுமே எடுத்துக்கொள்ளலாம். தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதும், தன்னிடம் உள்ள பொருளைத் தேவைப்படுவோருக்கு கொடுப்பதும் ஒரு தலைவனுக்கு அழகு. அறிவூக்கம் என்பதை அறிவு + ஊக்கம் என்று பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தான் ஈடுபட்டுள்ள துறையில் மிகச் சிறந்த அறிவு பெற்றவனாக இருப்பதும் ஒரு செயலைத் தொடர்ந்து வெற்றி கரமாக செய்ய ஊக்கமுடயவனாக  இருப்பதும் ஒரு தலைவனின் மிகச் சிறந்த இயல்பு.

திருக்குறளும் தலைமை தத்துவமும்-1

Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of July 2021

எல்லோருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்னவென்றால் சாதிக்க வேண்டும் !,  வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். கலாம் சொன்னதுபோல கனவு காணவேண்டும். ஒரு இலட்சியக் கனவு. இருந்தால், நம்மாலும் முன்னேற முடியும். மேலாண்மைத் துறையின் தந்தை  அல்லது குரு என்று அழைக்கப்படும் பீட்டர் ட்ரட் க்கக் ர் கருத்துப்படி "தலைவர்க ளின் முக்கியமான பணி, இலக்குகளை தீர்மானிப்பது மற்று ம் அதனை எவ்வாறு செயல்படுத்துத்துவது என்பதே".  

நம் தமிழ் இலக்கியத்தில், பதினெண்கீழ்க்கணக் க்குக நூலான திருக்குக் றளில், வள்ளுவர் 

"வெள்ளத்து அனைய மலர்நீர் நீட்டம் மாந்தர்தம் 

உள்ளத்தனையது உயர்வுர் " - என்று கூறுகிறார். 


ஒருவனுடைய கனவு இலட்சியம் நிறைவேறினால் அவன் வெற்றி பெற்றவனகிறான். இதையே தான் வள்ளுவர் தமது குறளில் எண்ணங்கள் என்ற கருத்தில் கூறுகிறார். நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்த அளவு உயர்ந்ததாக இருக்கும்  நாம் பெரும் வெற்றியும்.        நீரில் இருக்குக் ம் பூவின் தண்டு, நீர் நிலை எவ்வளவு ஆழம் இருக்குமோ அந்தந் அளவு நீளம் உள்ளதாக இருக்கும், நீரின் ஆழம் அதிகரிக்கக் அதிகரிக்கக் த் தண்டின் நீளமும் அதிகமாகிக் கொண்டு இருக்கும். அது போல மனிதர் உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்தந் அளவுக்கு தங்கள் வாழ்கையில் உயர்ந்த வெற்றியை பெறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

Thursday, July 8, 2021

கிழக்காசிய நாடுகளில் செட்டியார்களின் பங்கு

Published in NBC-1000 Days Celebration Souvenir 2019 and Namadhu Chettinad Magazine July 2021

கிழக்காசிய நாடுகளின் முன்னேற்றத்தில் நம் நகரத்தார்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. நம்மில் பலரும் இன்று வரை பர்மாவின் ஏற்றம் மிக்க வாழ்வையும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் நம் இனத்தாரைச் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வையும் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மால் தான் பெரும்பாலான கிழக்காசிய நாடுகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தன. அந்தக் காலத்தில், சமுதாயத்தில் பெரிய மனிதர்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும் என்ற சூழல் இருந்தது. இதை மாற்றியவர்கள் இந்தியாவின் வணிகச் சமுதாயமான செட்டியார்கள் எனப் பரவலாக அறியப் பெற்ற நகரத்தார்களே.

 

நம் இனத்தார் முதலில் சென்றது, இலங்கைக்குத் தான். இன்னும் இலங்கையில் செட்டி தெரு உள்ளது. அங்குதான் நாம் கிட்டங்கிகளைத் திறந்து இலங்கையின் பொருளாதரத்தை செம்மைப் படுத்தினோம். இப்பொழுது அதன் பெயர் கடற்கரைச் சாலை (SEA STREET). டச்சுகாரர்கள் உடன் 1656 ஆம் வருடம் 17 ஆம் நூற்றாண்டில் சென்று அங்குள்ள தோட்டங்களைப் பார்த்துக் கொண்டும் மற்றும் இலங்கையின் விவசாய மற்றும் தொழில் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியும் வந்தோம். ஆனால், அங்கு பெரிதாக நம்மால், நம் தொழிலை வளர்த்துக் கொள்ள இயலவில்லை. அதற்குக் காரணம் டச்சின் MONOPOLISTIC TRADING POLICY. 1796ல் இலங்கை இங்கிலாந்தின் வசம் வந்தது. அது முதல் நமக்கு ஏறுமுகம் தான். இலங்கையின் முதல் வங்கியான Bank of Ceylon 1841ல் ஆரம்பிக்கப்பெற்றது. இதுவே இலங்கையின் முதல் வங்கி. என்றாலும் வங்கி மற்றும் மூலதன நடைமுறைகள் அத்தனையுமே நம் செட்டியார்கள் வசம்தான் இருந்தன. அதற்கு முக்கியமான காரணங்கள் நம்மவர்களின் நம்பிக்கை, ஒற்றுமை, சாதி சார்ந்த வளர்ச்சி, நமது சுமூக உறவு. இலங்கையின் பொருளாதார எழுத்தாளர்கள் அனேகர் நம்மைக் குறிப்பிடும்போது “Merchant Bankers of Ceylon” or “the only Bankers” என்று தான் எழுதுகிறார்கள். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அவர்களின் வங்கிகளின் மூலமாக பணத்தைப் பெற்று இலங்கையின் தோட்டங்களில் முதலீடு செய்தனர். ஆனால் இலங்கையின் மக்களுக்குப் பெரிய தலைவலியே மூலதனப் பற்றாக்குறைதான். அது நம்மவர்கள் வரவிற்குப் பிறகு மாறத் தொடங்கியது. நமது செட்டியார்களின் மூலதனம் அவர்களின் உறவுகளுக்குள்ளிருந்தே  எடுகப்பப்பெற்றது. அதற்கும் மேலே மூலதனம் வேண்டிய போது மேற்கத்திய வங்கிகள் அல்லது இந்தியாவில் இருந்த இங்கிலாந்து வங்கிகளிடம் இருந்து பெறப்பட்டது. மேலும் நமது செட்டியார்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு மற்றும் நம்பிக்கையை தமக்குள்ளும் மற்ற வங்கியாளர்களிடமும் பகிர்ந்து கொண்டனர். அதனால் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்பட்டது. நம் செட்டியார்களின் தொழில் திறமையே அவர்களின் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணம். நாம் கிடைக்கும் வாய்ப்புக்களை உபயோகபடுத்துவதில் வல்லவர்கள். முதலில் நாம் வணிகம் செய்யவே இலங்கை சென்றோம். ஆனால் இலங்கையில் சாமானியர்களுக்கு முதலீடு கிடைக்காத காரணத்தினாலும், மேற்கத்திய நாடுகளுக்குத் தேவையான, தோட்டப் பொருளாதாரமான, காப்பி, தேயிலை, ஏலக்காய், மிளகு மற்றும் இரப்பருக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் என்பதாலும், வங்கித் தொழிலில் முதலீடு செய்து சிறப்பாக செய்து வந்தோம். 

 

பிறகு நாம் சென்றது பர்மாவிற்கு. நாம் கொல்கத்தாவில் இருந்து, பிரிடிஷாருடன் 1826-ல் ஆங்கிலோ-பர்மா போர் நடந்தபோது இந்தியப் பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினருடன் இங்கிலாந்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளை நோக்கிச் சென்றோம். பர்மாவை நாம் அரிசியின் தொட்டில் என்றே சொல்லலாம். மேற்கத்திய நாடுகள் ஆசியாவின் வளங்களை குறிவைத்து வர ஆரம்பித்தனர். அவர்களின் தேவையோ வளங்கள். ஆனால் அவர்களுக்கு முதலீடு செய்யப் பயம். அதனால் அவர்கள் நம்மை இடை ஈட்டாளர்களாக வைத்துக் கொண்டார்கள். 1869ல் திறக்கப்பட்ட சூயெஸ் கால்வாய் பல விதமான வணிக வாய்ப்புகளுக்குத் திறவு கோலாக அமைந்தது. அதற்கு முன்பெல்லாம் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வது என்றால் குறைந்தது 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகும்.  சூயெஸ் திறப்பு, பயண நாட்களைப் பாதிக்கும் மேலாகக் குறைத்தது மற்றும் வர்த்தக வாய்ப்புகளையும் கூட்டியது. 1869ல் கொண்டு வரப்பட்ட பர்மாவின் நிலங்கள் சட்டமும் நமக்கு நல்ல வாய்புகளை உருவாக்கி தந்தது. நிலங்களை ஈடாக வைத்து வட்டித் தொழில் விரிவடைந்தது. இது பல செட்டியார்களை பர்மாவின் பக்கம் திருப்பியது. 1930 ஆம் வருடத்திய கணக்குப் படி, 2000க்கும் மேலான செட்டியார் கடைகள் பர்மாவில் இருந்தன. சிறிய ஊர்களிலும் கூடக் கடைகள் இருந்தன. அதிகமான கடைகள் ஐராவதி ஆற்றின் பாசன மற்றும் காட்டுப் பகுதியிலும், ரங்கூனிலும் இருந்தன. பர்மாவின் தோட்டங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் புத்துணர்வு அளித்து வளர்த்தது நமது சமூகமே. விவசாயப் பொருளாதராத்திற்கும், மேற்கத்திய வங்கிகளுக்கும் ஒரு பாலமாக திகழ்ந்து வந்தோம். 1930 ல் நடந்த Burma Provincial Banking Enquiry அறிக்கையில் நம் கடைகளைப் பொறுத்தவரை நிலையான வணிக நேரமோ, விடுமுறை நாட்கள் என்றோ இல்லை. எல்லா நாட்களும், எல்லா நேரமுமே வணிக நேரம் தான். பங்குனி உத்திரம், தைப்பூசம் மற்றும் செட்டியார்களின் பண்டிகைகளைத் தவிர மற்ற நாட்கள் எல்லாமே வேலை நாட்கள் தான். அதனால் பணம் கொடுத்தவர் வாங்குவதற்கும், கடன் தேவைப் படுபவர் பெறுவதற்கும் எந்த நேரம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்தது. இதுவும் பொருளாதரத்தை முன்னேற்ற உதவியது. 

 

இதைத் தொடர்ந்து பிரிட்டனின் காலனியாதிக்கத்தில் இருந்த மலாயா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிரான்ஸின் காலனியாதிக்கத்தில் இருந்த வியட்நாம், லாவோஸ், கம்போடியாவிற்கு, மேற்கத்திய வங்கிகளின் துணையோடும் அரசாங்கத்தின் துணையோடும் சென்றோம் என்றால் மிகையில்லை. இங்கு நாம் விவசாயத்திற்கு மட்டும் இல்லாது டின், ரப்பர், மண்ணிற்குக் கிழே இருக்கும் கனிம வளத்தை எடுக்கும் தொழிற்சாலைக்கும் நிதியுதவி செய்துள்ளோம். வட்டி விகிதங்களையும் குறுகிய காலத்திற்கு என்றும், நீண்ட காலத்திற்கும் என்றும், இடைக் காலத்திற்கு என்றும் பிரித்துக் கொடுத்துள்ளோம். பொருள் மற்றும் நிலத்திற்கு ஈடாக என்றால் ஒரு வட்டி, எதுவேயில்லாமல் நம்பிக்கையின் பேரில் கொடுப்பது என்றால் ஒரு வட்டி என்று பல விதங்களில் இன்றைய வங்கிகளைப் போல் செயல்பட்டு வந்தோம். தொழிலின் மேல் நம்மவர்கள் வைத்த நம்பிக்கை, நமது திறமை, மற்றும் ஒற்றுமையே நம்மவர்களின் வெற்றிக்கு முக்கியமான காரணம். எண்ணிகையில் நாம் சிறியவர்களாக இருந்தாலும், நமது எண்ணங்களில் நாம் பெரியவர்கள். செட்டி வட்டி என்றே ஓன்று உள்ளது. இது அவரவர், தீர்மானிப்பது அல்ல. எல்லோருக்கும் பொதுவான ஒரு இடத்தில் கூடி, சூழ்நிலைகளைப் பற்றி விவாதித்து, சேர்ந்து ஒருமனதாக முடிவெடுப்பார்கள். 

 

வெளிநாடுகளுக்குச் சென்ற செட்டியார்கள் அனைவருமே, பழங்காலத்தைப் போன்று தனது பெண்டு, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு குடும்பமாகச் செல்லவில்லை. எல்லோருமே, தனித் தனியாகத் தான் சென்றார்கள். சொல்லிக்கொண்டு, வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு, திரும்பி வருவோமோ, அல்லது வரமாட்டோமோ என்று தான் சென்றார்கள். செட்டிக் கப்பலுக்கு செந்தூரன் துணை, என்பதே தாரக மந்திரம். அதனால் தொழிலே முதல் என்று வாழ்ந்தார்கள். வந்த வருமானத்தில் ஒரு பகுதியைக் கோவிலுக்கும், நமது சமூகம் சார்ந்த ஊர்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் செலவழித்து வந்தனர். செட்டியார்கள் கோட்டை கோட்டையாய் வீடு கட்டியதும் இந்தச் சமயத்தில் தான். பர்மா தேக்கு, இத்தாலியன் மார்பிள், ரங்கூன் மாப்பிள்ளை சீப்பு, கண்ணாடி, பீங்கான் அப்பப்பா..... எத்தனை.... எத்தனை.... சொல்லிக்கொண்டே செல்லலாம்.

 

பர்மா தேக்கு இந்திய வந்த கதையே ஒரு சுவாரசியம் தான்..... ஐராவதி நதிப்பகுதியை வளமான விவசாயப் பகுதியாக மாற்ற வேண்டும். அப்பொழுது அங்கு இருந்த நல்ல தரமான தேக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. நாம் அதை அப்படியே ஐராவதி நதியில் போட்டு, நதி கடலில் சேரும் இடத்தில் வந்து நாகப்பட்டினம் அல்லது தொண்டி செல்லும் கப்பலின் பின் பகுதியில் விலாசம் சேர்த்து அனுப்பி விடுவோம். கடலில் உள்ளே நீரோட்டம் என்று ஓன்று உண்டு. காற்றின் திசைக்கேற்ப வருடத்தில் சிலகாலம் ஒரே திசையை நோக்கிச் செல்லும். அந்தப் படகும் அவ்வாறே செல்லும். தண்ணீரில் செல்வதால், மரத்தின் கணம் படகை ஒன்றும் செய்யாது. மேலும், நீரோட்டத்தின் போக்கில் செல்வதால், சென்றடைய வேண்டிய இடத்தைச் சரியாகச் சென்றடையும். தமிழகம் வந்த பிறகு, அனுப்பியவரின் உறவினர் வந்து அதை எடுத்துச் சென்று, வீடுகளுக்கும், மரச் சாமான்கள் செய்யவும் உபயோகப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு வந்தது தான் இன்றைய செட்டிநாட்டுப் பகுதிகளில் உள்ளவை. 

 

இவ்வாறு சென்று கொண்டிருந்த வேளையில் தான், எதிர்பார்க்காத மூன்று பெரிய  விஷயங்கள் நம்மை ஆட்டம் கொள்ளச் செய்தன. ஓன்று, காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் சுதந்திர வேட்கை பரவியது. எல்லா நாடுகளும் சுதந்திரம் கேட்டன. இரண்டாவது, 1925ல் பிரபலமான அன்றைய மெட்ராஸில் இருந்த செட்டியார் வங்கி திவாலானது. மூன்றாவது, பொருளாதார மந்த நிலை. அமெரிக்கா நாட்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக ஒரு விதமான பொருளாதார மந்த நிலை 1929ல் அந்நாட்டில் தொடங்கியது. 

 

சுதந்திர வேட்கையின் காரணமாக அந்தந்த நாட்டு மக்கள் வெளி நாட்டினர் அனைவரையுமே ஆதிக்கச் சக்தியாக பார்க்கத் துவங்கினர். மேலும், நம் இனத்தவர் அனைவருமே, மிகச் சிலரைத் தவிர, ஆண்கள் மட்டுமே வியாபாரத்திற்குச் செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தோம். குடும்பமாக வாழவில்லை. வரும் இலாபத்தையும் முழுவதுமாக, நமது ஊருக்கே கொண்டு சென்றோம். கோவில்களையும், சிறு சிறு தர்மங்களையும் தவிர நாம் அனைத்தையுமே நமது ஊருக்குக் கொண்டு வந்தோம். நமது ஊரில் தர்மங்களை நன்றாக எல்லோருக்கும் செய்தோம். ஆனால் பிழைக்கச் சென்ற இடத்தில் பெரிதாகச் செய்யவில்லை. இதனால் தானோ என்னோவோ, நம்மை ஆதிக்கச் சக்தியாகக் காணத் துவங்கி விட்டனர். 

 

1925ல் திவாலான வங்கியின் காரணமாக மேற்கத்திய வங்கிகள் செட்டியார்களுக்குக் கடன் கொடுப்பதை நிறுத்தின. வங்கி திவலானதற்க்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. மேற்கத்திய வங்கிகளும், இதற்கு ஒரு காரணம். இது நம்மேல் மற்றவர்களுக்கு இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்தது. ஆனால், இது நம்மைப் பெரிதாகத் தாக்கவில்லை. இலங்கையில் மட்டுமே இதனால் பாதிப்பு இருந்தது. 

 

பொருளாதார மந்த நிலையால், பொருள்களின் விலைகள் சரிந்தன. ஏற்றுமதி குறைந்ததால் பொருள்கள் தேங்கின. கடன் வங்கியவர்களால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் கடனுக்கு ஈடாக கொடுத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எல்லாம் செட்டியார்கள் வசம் வந்தன. அதை விற்கவும் முடியவில்லை, அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. ஏனென்றால் நாம் செய்ததோ நிதி சார்ந்த தொழில். நமது தேவையும் நிதி மட்டுமே. மேலும் நாம் வணிகம் செய்யத் தனியாக சென்றவர்கள். நாயர் (Nair, 2013) என்ற ஆராய்ச்சியாளரின் கருத்துப்படி, நமது முதலீடு பின்வரும் நாடுகளில்....

 

நாடு

முதலீடு

பர்மா

62.50 %

மலேயா & சிங்கப்பூர் 

21.00 %

இலங்கை

11.50 %

மெட்ராஸ் மாகாணம்

00.80%

மற்றவை

04.20 %

மொத்தம்

100.00%

  

பர்மாவில் நமது முதலீடு 62.50 சதவீதம் என்றால் யோசித்துப் பாருங்கள். அந்த நாடே செட்டியார்களுடயது என்றே சொல்லலாம். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் அந்தக் கடனுக்கு ஈடாக நிலங்கள் எல்லாம், செட்டியார் வசம் வந்துவிட்டன. ஒரு சிலர் செட்டியார்கள் அநியாய வட்டி வாங்கியதாகவும் ஆடிக்குத் தை ஒரு வருடம் என்று கணக்கிட்டு வட்டி வாங்கியதாகவும் சொல்வார்கள். ஆனால் அது தவறு.  எந்தவொரு ஆணைய அறிக்கையின் படியும் அது ஆவணப்படுத்தப்படவில்லை. ஒரு சிலர் 1930க்குப் பிறகு அதிக வட்டி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது பொருளாதார மந்த நிலையினால் வந்த வினை, மற்றும் நம்முடன் போட்டி போட இயலாத இயலாமையால் சீனர்கள் பர்மியர்கள் மனதில் தூவிய நச்சு விதை.

 

இதே சமயத்தில் தான் (1930) இந்தோ பர்மீஸ் கலவரம் மூண்டது. செட்டியார்களையும் அவர்கள் இந்தியர்களாகப் பார்த்தனர். அப்பொழுது நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டு நமது வணிகம் சுருக்கப்பட்டது. வட்டி மற்றும் கடன்கள், அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கே கொடுக்க வேண்டும். 1938 ஆம் வருடம், நன்றாக விளைகின்ற நிலங்கள் அனைத்தும் நமது பகுதிகளில் இருந்த போதும், புதிதாகக் கடன் வழங்க வழி இல்லை என்ற நிலை.

 

1932ல் இலங்கை அரசாங்கம் வருமான வரிச் சட்டத்தில் (Income Tax Ordinanace, 1932) பல்வேறு வரிகளைச் செட்டியார் வணிகத்தின் மீது கொண்டு வந்தனர். பணப்பரிமாற்ற சட்டத்தின் மூலம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அந்த வணிகத்தையும் இலங்கை வங்கியின் கீழ் கொண்டு வந்தனர். அதனால் நிதி வணிகம் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். செட்டியார்கள் இலங்கைக்குச் சென்றது வணிகம் செய்யவே தவிர அங்கு வீடு வாசல் வாங்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்கு அல்ல. 1925 முதல் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற நிதி குறைந்து, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டது. 

 

இதே காலகட்டத்தில் தான், காலனியாதிக்கத்தில் இருந்த எல்லா நாடுகளிலும், வங்கிப் பணிகளை ஆராய ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் பேரில் மத்திய வங்கிகள் உருவாக்கப்பட்டு, நிதி சம்பந்தமான அனைத்துப் பணிகளும் அதன் கீழ் சென்றன. 

 

ஒரு சில ஆணையங்கள் 

 

Madras Provicial Banking Committee Enquiry – 1929-30

Ceylon Banking Commission – 1934

Burma provincial Banking Enquiry – 1930 and so on. 

 

இதையெல்லாம் தவிர, 1939 முதல் 1942 வரை நடந்த இரண்டாவது உலக யுத்த சமயத்தில் பர்மா காலனியாதிக்கத்திலிருந்து ஜப்பானின் கைக்குச் சென்றது. இந்தியர்கள் எல்லாம் கிடைத்ததை எடுத்துக் கொண்டு கால் நடையாகவோ, கால் நடைகளின் உதவியுடனோ திரும்பினர். 

 

ஆனால், மற்ற நாடுகளில் இருந்து நாம் அவ்வாறு வெளியேறவில்லை. நிதி சார்ந்த தொழிலில் வந்த சில நடைமுறைச் சிக்கலினால், நாம் அத்தொழிலைக் குறைத்துக் கொண்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தோம். மற்ற புதிய தொழில்களைத் தொடங்க ஆரம்பித்தோம். முருகப்பா குழுமம், செட்டிநாடு குழுமம் உள்ளிட்ட ஒரு சில செட்டியார்கள் இதை முன்பே கவனித்து, வெள்ளையர்கள் தங்கள் சொத்துகளை விற்பதை ஊன்றிக் கவனித்து, முன் ஜாக்கிரதையாக மற்ற நாடுகளில் புதிதாக முதலீடு செய்யாமல், அங்கிருந்து வரும் இலாபப் பணத்தை அப்படியே இந்தியாவில் முதலீடு செய்தனர். 

 

இவ்வாறு நாம் வர்த்தக சமுகத்திலிருந்து, நிதி சமுதாயமாக மாறி, இப்பொழுது அதிகமாக வேலைக்குச் செல்பவர்களாக மாறி விட்டோம். மீண்டும் நாம் ஒரு வர்த்தக சமுதாயமாக, கொண்டு விற்று வரும் சமுகமாக, புதிய சூழ்நிலைகளுக்கேற்ப தொழில் செய்யும் வர்க்கமாக மாற வேண்டும் என்பதே நம் குறிக்கோள்.

 

 

தமிழ் இலக்கியங்களும், தமிழ் புலவர்களும்

 தமிழ் இலக்கியங்களும், தமிழ் புலவர்களும்

 

எட்டுத்தொகை நூல்கள் – சங்க நூல்

 

1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை

 

பத்துப்பாட்டு நூல்கள் – சங்க நூல்

 

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம்

 

பதினெண்கீழ்க்கணக்கு - நீதி நூல்கள்

 

உலகினர் வியந்து போற்றும் 1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.கைந்நிலை

 

ஐம்பெருங்காப்பியங்கள்

 

1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி

 

 

இலக்கண நூல்கள்

 

1.அகத்தியம் 2.இறையனார் களவியல் உரை 3.புறப்பொருள்வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல்

 

பக்தி இலக்கியம்

 

1.தேவாரம் 2.திருவாசகம் 3.திருப்பாவை 4.திருவெம்பாவை 5.நாச்சியார் திருமொழி 6.ஆழ்வார் பாசுரங்கள்

 

சிற்றிலக்கியம்

 

1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி 5.மூவருலா 6.முத்தொள்ளாயிரம்

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்....

 

1.தொன்மை

2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)

3.பொதுமைப் பண்புகள்

4.நடுவுநிலைமை

5.தாய்மைத் தன்மை

6.கலை பண்பாட்டுத் தன்மை

7.தனித்து இயங்கும் தன்மை

8.இலக்கிய இலக்கண வளம்

9.கலை இலக்கியத் தன்மை

10.உயர் சிந்தனை

11.மொழிக் கோட்பாடு

 

இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்.... !!

 

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!

 

ஔவையும்...

வள்ளுவனும்..

கம்பனும்..

அயோத்திதாசரும்

 

அகம்பன் மாலாதனார்

அஞ்சியத்தை மகள் நாகையார்

அஞ்சில் அஞ்சியார்

அஞ்சில் ஆந்தையார்

அடைநெடுங்கல்வியார்

அணிலாடு முன்றிலார்

அண்டர் மகன் குறுவழுதியார்

அதியன் விண்ணத்தனார்

அதி இளங்கீரனார்

அம்மூவனார்

அம்மெய்நாகனார்

அரிசில் கிழார்

அல்லங்கீரனார்

அழிசி நச்சாத்தனார்

அள்ளூர் நன்முல்லையார்

அறிவுடைநம்பி

ஆரியன் பெருங்கண்ணன்

ஆடுதுறை மாசாத்தனார்

ஆதிமந்தி

ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்

ஆலங்குடி வங்கனார்

ஆலத்தூர் கிழார்

ஆலம்பேரி சாத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்

ஆவூர் காவிதிகள் சகாதேவனார்

ஆவூர்கிழார்

ஆலியார்

ஆவூர் மூலங்கீரனார்

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

இடைக்காடனார்

இடைக்குன்றூர்கிழார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இம்மென்கீரனார்

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்

இருந்தையூர்க் கொற்றன் புலவன்

இரும்பிடர்தலையார்

இளங்கீரந்தையார்

இளங்கீரனார்

இளநாகனார்

இளந்திரையன்

இளந்தேவனார்

இளம்புல்லூர்க் காவிதி

இளம்பூதனார்

இளம்பெருவழுதி

இளம்போதியார்

இளவெயினனார்

இறங்குடிக் குன்றநாடன்

இறையனார்

இனிசந்த நாகனார்

ஈழத்துப் பூதந்தேவனார்

உகாய்க் குடிகிழார்

உக்கிரப் பெருவழுதி

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்

உம்பற்காட்டு இளங்கண்ணனார்

உருத்திரனார்

உலோச்சனார்

உவர்கண்ணூர் புல்லங்கீரனார்

உழுந்தினைம் புலவர்

உறையனார்

உறையூர் இளம்பொன் வாணிகனார்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

உறையூர்ச் சல்லியங் குமரனார்

உறையூர்ச் சிறுகந்தனார்

உறையூர்ப் பல்காயனார்

உறையூர் மருத்துவன் தாமோதரனார்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

ஊட்டியார்

ஊண்பித்தை

ஊண்பொதி பசுங்குடையார்

எயிற்றியனார்

எயினந்தையார்

எருமை வெளியனார்

எருமை வெளியனார் மகனார் கடலனார்

எழூப்பன்றி நாகன் குமரனார்

ஐயாதி சிறு வெண்ரையார்

ஐயூர் முடவனார்

ஐயூர் மூலங்கீரனார்

ஒக்கூர் மாசாத்தனார்

ஒக்கூர் மாசாத்தியார்

ஒருசிறைப் பெரியனார்

ஒரூத்தனார்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

ஓதஞானி

ஓதலாந்தையார்

ஓரம்போகியார்

ஓரிற்பிச்சையார்

ஓரேர் உழவர்

ஔவையார்

கங்குல் வெள்ளத்தார்

கச்சிப்பேடு இளந்தச்சன்

கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்

கச்சிப்பேடு பெருந்தச்சனார்

கடம்பனூர்ச் சாண்டில்யன்

கடலூர்ப் பல்கண்ணனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கடுந்தொடைக் காவினார்

கோவர்த்தனர்

கோவூர்க் கிழார்

கோவேங்கைப் பெருங்கதவனார்

கோழிக் கொற்றனார்

கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்

சங்கவருணர் என்னும் நாகரியர்

சத்திநாதனார்

சல்லியங்குமரனார்

சாகலாசனார்

சாத்தந்தந்தையார்

சாத்தனார்

சிறுமோலிகனார்

சிறுவெண்டேரையார்

சிறைக்குடி ஆந்தையார்

சீத்தலைச் சாத்தனார்

செங்கண்ணனார்

செம்பியனார்

செம்புலப்பெயல்நீரார்

செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்

செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்

செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்

செல்லூர்க்கோசிகன் கண்ணனார்

சேந்தங்கண்ணனார்

சேந்தம்பூதனார்

சேந்தங்கீரனார்

சேரமானெந்தை

சேரமான் இளங்குட்டுவன்

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

சோழன் நலங்கிள்ளி

சோழன் நல்லுருத்திரன்

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

தனிமகனார்

தாமாப்பல் கண்ணனார்

தாமோதரனார்

தாயங்கண்ணனார்

தாயங்கண்ணியார்

திப்புத்தோளார்

திருத்தாமனார்

தீன்மதிநாகனார்

தும்பிசேர்கீரனார்

துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்

துறையூர்ஓடைக்கிழார்

தூங்கலோரியார்

தேய்புரி பழங்கயிற்றினார்

தேரதரன்

தேவகுலத்தார்

தேவனார்

தொடித்தலை விழுத்தண்டினர்

தொண்டி ஆமூர்ச்சாத்தனார்

தொல்கபிலர்

நக்கண்ணையார்

நக்கீரர்

நப்பசலையார்

நப்பண்ணனார்

நப்பாலத்தனார்

நம்பிகுட்டுவன்

நரிவெரூத்தலையார்

நரைமுடி நெட்டையார்

நல்லச்சுதனார்

நல்லந்துவனார்

நல்லழிசியார்

நல்லாவூர்க் கிழார்

நல்லிறையனார்

நல்லுருத்திரனார்

நல்லூர்ச் சிறுமேதாவியார்

நல்லெழுநியார்

நல்வழுதியார்

நல்விளக்கனார்

நல்வெள்ளியார்

நல்வேட்டனார்

நற்சேந்தனார்

நற்றங்கொற்றனார்

நற்றமனார்

நன்பலூர்ச் சிறுமேதாவியார்

நன்னாகனார்

நன்னாகையார்

நாகம்போத்தன்

நாமலார் மகன் இளங்கண்ணன்

நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்

நெடுங்கழுத்துப் பரணர்

நெடும்பல்லியத்தனார்

நெடும்பல்லியத்தை

நெடுவெண்ணிலவினார்

நெட்டிமையார்

நெய்தற் கார்க்கியார்

நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்

நெய்தற்றத்தனார்

நொச்சி நியமங்கிழார்

நோய்பாடியார்

பக்குடுக்கை நன்கணியார்

படுமரத்து மோசிகீரனார்

படுமரத்து மோசிக்கொற்றனார்

பதடிவைகலார்

பதுமனார்

பரணர்

கடுந்தொடைக் கரவீரன்

கடுவன் இளமள்ளனார்

கடுவன் இளவெயினனார்

கடுவன் மள்ளனார்

கணக்காயன் தத்தனார்

கணியன் பூங்குன்றனார்

கண்ணகனார்

கண்ணகாரன் கொற்றனார்

கண்ணங்கொற்றனார்

கண்ணம் புல்லனார்

கண்ணனார்

கதக்கண்ணனார்

கதப்பிள்ளையார்

கந்தரத்தனார்

கபிலர்

கயத்தூர்கிழார்

கயமனார்

கருங்குழலாதனார்

கரும்பிள்ளைப் பூதனார்

கருவூர்க்கிழார்

கருவூர் கண்ணம்பாளனார்

கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்

கருவூர் கலிங்கத்தார்

கருவூர் கோசனார்

கருவூர் சேரமான் சாத்தன்

கருவூர் நன்மார்பனார்

கருவூர் பவுத்திரனார்

கருவூர் பூதஞ்சாத்தனார்

கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்

கல்பொருசிறுநுரையார்

கல்லாடனார்

கவைமகன்

கழாத்தலையார்

கழார்க் கீரனெயிற்றியனார்

கழார்க் கீரனெயிற்றியார்

கழைதின் யானையார்

கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்

கள்ளில் ஆத்திரையனார்

காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்

காசிபன் கீரன்

காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்

காப்பியஞ்சேந்தனார்

காப்பியாற்றுக் காப்பியனார்

காமஞ்சேர் குளத்தார்

காரிக்கிழார்

காலெறி கடிகையார்

காவட்டனார்

காவற்பெண்டு

காவன்முல்லையார்

காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்

கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்

கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்

கிடங்கில் குலபதி நக்கண்ணனார்

கிள்ளிமங்கலங்கிழார்

கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்

கீரங்கீரனார்

கீரந்தையார்

குடபுலவியனார்

குடவாயிற் கீரத்தனார்

குட்டுவன் கண்ணனார்

குட்டுவன் கீரனார்

குண்டுகட் பாலியாதனார்

குதிரைத் தறியனார்

குப்பைக் கோழியார்

குமட்டூர் கண்ணனார்

குமுழிஞாழலார் நப்பசலையார்

குழற்றத்தனார்

குளம்பனார்

குளம்பாதாயனார்

குறமகள் இளவெயினி

குறமகள் குறியெயினி

குறியிறையார்

குறுங்கீரனார்

குறுங்குடி மருதனார்

குறுங்கோழியூர் கிழார்

குன்றம் பூதனார்

குன்றியனார்

குன்றூர்க் கிழார் மகனார்

கூகைக் கோழியார்

கூடலூர்க் கிழார்

கூடலூர்ப பல்கண்ணனார்

கூவன்மைந்தன்

கூற்றங்குமரனார்

கேசவனார்

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

கொட்டம்பலவனார்

கொல்லன் அழிசி

கொல்லிக் கண்ணன்

கொள்ளம்பக்கனார்

கொற்றங்கொற்றனார்

கோக்குளமுற்றனார்

கோடைபாடிய பெரும்பூதன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

கோட்டியூர் நல்லந்தையார்

கோண்மா நெடுங்கோட்டனார்

கோப்பெருஞ்சோழன்

பராயனார்

பரூஉமோவாய்ப் பதுமனார்

பறநாட்டுப் பெருங்கொற்றனார்

பனம்பாரனார்

பாண்டரங்கண்ணனார்

பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

பாண்டியன் பன்னாடு தந்தான்

பாண்டியன் மாறன் வழுதி

பாரதம் பாடிய பெருந்தேவனார்

பாரிமகளிர்

பார்காப்பான்

பாலைக் கௌதமனார்

பாலை பாடிய பெருங்கடுங்கோ

பாவைக் கொட்டிலார்

பிசிராந்தையார்

பிரமசாரி

பிரமனார்

பிரான் சாத்தனார்

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்

புல்லாற்றூர் எயிற்றியனார்

பூங்கணுத் திரையார்

பூங்கண்ணன்

பூதங்கண்ணனார்

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

பூதம்புல்லனார்

பூதனார்

பூதந்தேவனார்

பெருங்கண்ணனார்

பெருங்குன்றூர்க் கிழார்

பெருங்கௌசிகனார்

பெருஞ்சாத்தனார்

பெருஞ்சித்திரனார்

பெருந்தலைச்சாத்தனார்

பெருந்தேவனார்

பெருந்தோட் குறுஞ்சாத்தன்

பெரும் பதுமனார்

பெரும்பாக்கன்

பெருவழுதி

பேயனார்

பேய்மகள் இளவெயினி

பேராலவாயர்

பேரிசாத்தனார்

பேரெயின்முறுவலார்

பொதுக்கயத்துக் கீரந்தை

பொதும்பில் கிழார்

பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி

பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்

பொத்தியார்

பொய்கையார்

பொருந்தில் இளங்கீரனார்

பொன்மணியார்

பொன்முடியார்

பொன்னாகன்

போதனார்

போந்தைப் பசலையார்

மடல் பாடிய மாதங்கீரனார்

மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

மதுரை இனங்கௌசிகனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கண்டராதித்தனார்

மதுரைக் கண்ணத்தனார்

மதுரைக் கவுணியன் பூதத்தனார்

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

மதுரைக் காருலவியங் கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைக் கொல்லன் புல்லன்

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

மதுரைச் சுள்ளம் போதனார்

மதுரைத் தத்தங்கண்ணனார்

மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்

மதுரைத் தமிழக் கூத்தனார்

மதுரைப் படைமங்க மன்னியார்

மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

மதுரைப் புல்லங்கண்ணனார்

மதுரைப் பூதனிள நாகனார்

மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

மதுரைப் பெருங்கொல்லன்

மதுரைப் பெருமருதனார்

மதுரைப் பெருமருதிளநாகனார்

மதுரைப் போத்தனார்

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்

மதுரை வேளாசன்

மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதனிளநாகனார்

மலையனார்

மள்ளனார்

மாங்குடிமருதனார்

மாடலூர் கிழார்

மாதீர்த்தன்

மாமிலாடன்

மாமூலனார்

மாயேண்டன்

மார்க்கண்டேயனார்

மாலைமாறன்

மாவளத்தன்

மாறோக்கத்துக் காமக்கண்ணியார்

மாறோக்கத்து நப்பசலையார்

மாற்பித்தியார்

மிளைக் கந்தன்

மிளைப் பெருங்கந்தன்

மிளைவேள் பித்தன்

மீனெறி தூண்டிலார்

முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

முடத்தாமக்கண்ணியார்

முடத்திருமாறன்

முதுகூத்தனார்

முதுவெங்கண்ணனார்

முப்பேர் நாகனார்

முரஞ்சியயூர் முடிநாகராயர்

முள்ளியூர்ப் பூதியார்

முலங்கீரனார்

மையோடக் கோவனார்

மோசிக்கண்ணத்தனார்

மோசிக்கீரனார்

மோசிக்கொற்றன்

மோசிக்கரையனார்

மோசிசாத்தனார்

மோசிதாசனார்

வடநெடுந்தத்தனார்

வடவண்ணக்கன் தாமோதரன்

வடமோதங்கிழார்

வருமுலையாரித்தி

வன்பரணர்

வண்ணக்கன் சோருமருங்குமரனார்

வண்ணப்புறக் கந்தரத்தனார்

வாடாப்பிராந்தன்

வாயிலான் தேவன்

வாயிலிலங்கண்ணன்

வான்மீகியார்

விட்டகுதிரையார்

விரிச்சியூர் நன்னாகனார்

விரியூர் நன்னாகனார்

வில்லக விரலினார்

விழிகட்பேதை பெருங்கண்ணனார்

விற்றூற்று மூதெயினனார்

விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

வினைத் தொழில் சோகீரனார்

வீரை வெளியனார்

வீரை வெளியன் தித்தனார்

வெண்கண்ணனார்

வெண்கொற்றன்

வெண்ணிக் குயத்தியார்

வெண்பூதன்

வெண்பூதியார்

வெண்மணிப்பூதி

வெள்ளாடியனார்

வெள்ளியந்தின்னனார்

வெள்ளிவீதியார்

வெள்வெருக்கிலையார்

வெள்ளைக்குடி நாகனார்

வெள்ளைமாளர்

வெறிபாடிய காமக்கண்ணியார்

வேட்டகண்ணன்

வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்

வேம்பற்றுக் குமரன்

 

மற்றும் பெண்பாற்புலவர்கள்...

 

அச்சியத்தை மகள் நாகையார்

அள்ளுரர் நன்முல்லை

ஆதிமந்தி - குறுந் 3

இளவெயினி - புறம் 157

உப்பை ஃ உறுவை

ஒக்கூர் மாசாத்தியார்

கரீனா கண்கணையார்

கவியரசி

கழார் கீரன் எயிற்றியார்

கள்ளில் ஆத்திரையனார்

காக்கை பாடினியார் நச்செள்ளையார்

காமக்கணிப் பசலையார்

காரைக்காலம்மையார்

காவற்பெண்டு

காவற்பெண்டு

கிழார் கீரனெயிற்றியார்

குட புலவியனார்

குமிழிநாழல் நாப்பசலையார்

குமுழி ஞாழல் நப்பசையார்

குறமகள் ஃ இளவெயினி

குறமகள் ஃ குறிஎயினி

குற மகள் இளவெயினியார்

கூகைக்கோழியார்

தமிழறியும் பெருமாள்

தாயங்கண்ணி - புறம் 250

நக்கண்ணையார்

நல்லிசைப் புலமை மெல்லியார்

நல்வெள்ளியார்

நெட்டிமையார்

நெடும்பல்லியத்தை

பசலையார்

பாரிமகளிர்

பூங்கண்ணுத்திரையார்

பூங்கண் உத்திரையார்

பூதபாண்டியன் தேவியார்

பெண்மணிப் பூதியார்

பெருங்கோப்பெண்டு

பேய்மகள் இளவெயினி

பேயனார்

பேரெயென் முறுவலார்

பொத்தியார்

பொன்மணியார்

பொன்முடியார்

போந்தலைப் பசலையார்

மதுவோலைக் கடையத்தார்

மாற்பித்தியார்

மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி

மாறோக்கத்து நாப்பசலையார்

முள்ளியூர் பூதியார்

முன்னியூப் பூதியார்

வரதுங்க ராமன் தேவியார்

வருமுலையாருத்தி

வில்லிபுத்தூர்க் கோதையார்

வெண்ணிக் குயத்தியார்

வெள்ளி வீதியார்

வெறிபாடிய காமக்கண்ணியர்...

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...