Tuesday, August 10, 2021

ஒரு சிறு உரையாடல் - திருவள்ளுவரைப் பற்றி....

 [11:46 AM, 7/29/2021] Hong Kong Somu Annan: "ஆதிபகவன் முதற்றே"   "ஆதிபகலவன்"   இதில் எது சரி ? இதுவரை உரை எழுதிய யாரும் ஏன் பகலவன் என்று பொருள் கொள்ளவில்லை ?

[11:55 AM, 7/29/2021] RM S Viswanathan: ஆதி பகவன் என்பதே சரி..... இதுவரை உரை எழுதியவர்கள் எல்லாம் பகவன் என்றே எழுதியுள்ளனர். 

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து – குறள் 1 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு 

மு.வ விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. 

சாலமன் பாப்பையா விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. 

கலைஞர் விளக்கம்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

[12:14 PM, 7/29/2021] Hong Kong Somu Annan: பகலவன் என்று சூரியனையும், நீரின்றி அமையாது உலகு என்பதில் வருணனையும் பொருள்படக் கூறியிருந்தாரேயானால் வள்ளுவர் ஒரு இந்து தானே ?

[12:37 PM, 7/29/2021] RM S Viswanathan: இந்த கோட்பாடு சிரமண மதங்களிலும் உண்டு. இவர் இந்துவா, ஆசீவகரா, சமணரா அல்லது புத்தம் சார்ந்தவரா என்ற ஒரு பெரிய ஆராய்ச்சி இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. 

திருவள்ளுவரும், சமயமும்

திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.

திருவள்ளுவரும், சைவமும்

திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், ‘திருவள்ளுவர் சித்தாந்த சைவர்’ எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.

அயோத்திதாசரும் தன்னுடைய திருவள்ளுவ ஆராய்ச்சியில் திருவள்ளுவரை சமண மதத்தவராகவே காண்கிறார். மேலும், திருவள்ளுவர் தனியாக தந்து உள்ள ஊழ் என்னும் அதிகாரமும் ஒரு காரணம். 

அறத்துப்பாலில் வள்ளுவர் மூன்று இயல் வைத்து உள்ளார். அதில் இல்லறவியலுக்கு 20 அதிகாரமும், துறவறவியலுக்கு 13 அதிகாரங்களும், ஊழியலுக்கு ஒரே ஒரு அதிகாரமும் தந்து உள்ளார். 

ஆனால், அவர் எச்சமயமோ, அவரின் குறள் இப்பொழுதும், படிக்கும் தோறும் புது புது அர்த்தத்தை காலத்திற்கு தகுந்தார் போல் தந்து கொண்டு இருக்கிறது.

Thursday, August 5, 2021

திருக்குறளும் தலைமைத்துவமும் 2

 Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of Aug 2021

திருக்குறளும் தலைமைத்துவமும் 2

ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத்திறனை வளர்க்க அற்புதமான விளக்காக இருப்பது நமது திருக்குறள். திருக்குறள் ஒன்றை ஒருவன் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால் அது தரும் ஞானம் அளவிட முடியாதது. இதைப்போல் ஒரு உயர்வான ஒப்பற்ற இலக்கியம் வேறு எங்கும் கிடையாது. மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாதக் கருத்துச் சுரங்கம். இலங்கை ஜெயராஜ் என்ற பேச்சாளர், அடிக்கடி குறிப்பிடும் ஒன்று, "தமிழைப் படிக்க வேண்டுமா? திருக்குறளை படி. தெய்வத்தை படிக்க வேண்டுமா? திருவாசகம் படி" என்பதே. எவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான புத்தகங்கள், திருக்குறளும், திருவாசகமும். 

"அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".

ஒரு தலைவனுக்குத் தேவையான முக்கியமான பண்புகளில் அஞ்சாமை ஒரு முக்கியமான பண்பு. எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பது. அல்லது நினைத்த காரியத்தில் நாம் அஞ்சாமல் துணிவுடன் இருப்பது முதல் பண்பாகும். ஈகை என்ற வார்த்தைக்கு தற்போதைய சூழ்நிலையில் ஞானம் தர்மம் என்ற இரண்டு பொருள்களையுமே எடுத்துக்கொள்ளலாம். தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதும், தன்னிடம் உள்ள பொருளைத் தேவைப்படுவோருக்கு கொடுப்பதும் ஒரு தலைவனுக்கு அழகு. அறிவூக்கம் என்பதை அறிவு + ஊக்கம் என்று பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தான் ஈடுபட்டுள்ள துறையில் மிகச் சிறந்த அறிவு பெற்றவனாக இருப்பதும் ஒரு செயலைத் தொடர்ந்து வெற்றி கரமாக செய்ய ஊக்கமுடயவனாக  இருப்பதும் ஒரு தலைவனின் மிகச் சிறந்த இயல்பு.

திருக்குறளும் தலைமை தத்துவமும்-1

Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of July 2021

எல்லோருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்னவென்றால் சாதிக்க வேண்டும் !,  வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். கலாம் சொன்னதுபோல கனவு காணவேண்டும். ஒரு இலட்சியக் கனவு. இருந்தால், நம்மாலும் முன்னேற முடியும். மேலாண்மைத் துறையின் தந்தை  அல்லது குரு என்று அழைக்கப்படும் பீட்டர் ட்ரட் க்கக் ர் கருத்துப்படி "தலைவர்க ளின் முக்கியமான பணி, இலக்குகளை தீர்மானிப்பது மற்று ம் அதனை எவ்வாறு செயல்படுத்துத்துவது என்பதே".  

நம் தமிழ் இலக்கியத்தில், பதினெண்கீழ்க்கணக் க்குக நூலான திருக்குக் றளில், வள்ளுவர் 

"வெள்ளத்து அனைய மலர்நீர் நீட்டம் மாந்தர்தம் 

உள்ளத்தனையது உயர்வுர் " - என்று கூறுகிறார். 


ஒருவனுடைய கனவு இலட்சியம் நிறைவேறினால் அவன் வெற்றி பெற்றவனகிறான். இதையே தான் வள்ளுவர் தமது குறளில் எண்ணங்கள் என்ற கருத்தில் கூறுகிறார். நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்த அளவு உயர்ந்ததாக இருக்கும்  நாம் பெரும் வெற்றியும்.        நீரில் இருக்குக் ம் பூவின் தண்டு, நீர் நிலை எவ்வளவு ஆழம் இருக்குமோ அந்தந் அளவு நீளம் உள்ளதாக இருக்கும், நீரின் ஆழம் அதிகரிக்கக் அதிகரிக்கக் த் தண்டின் நீளமும் அதிகமாகிக் கொண்டு இருக்கும். அது போல மனிதர் உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்தந் அளவுக்கு தங்கள் வாழ்கையில் உயர்ந்த வெற்றியை பெறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...