மழை துளிதுளியாய் அவள் நினைவுகள் விழுகின்றன,
மழை துளிதுளியாக என் நெஞ்சில் சிதறுகின்றன.
இலை மேல் மழைத்துளியாக அவள் வார்த்தைகள்
அழகாக, மெதுவாக, ஆனால் ஆழமாக.
இங்கு எழுதப்பட்டுள்ளவை என்னுடைய எண்ணங்களும் நினைவில் கொள்ள வேண்டிய சில விசயங்களுமே......... RM S விஸ்வநாதன் (+91 95661 51110, rmsviswa@gmail.com)
மழை துளிதுளியாய் அவள் நினைவுகள் விழுகின்றன,
மழை துளிதுளியாக என் நெஞ்சில் சிதறுகின்றன.
இலை மேல் மழைத்துளியாக அவள் வார்த்தைகள்
அழகாக, மெதுவாக, ஆனால் ஆழமாக.
சல சல மழையில்...
சங்கு போல் பனியில்....
சங்கீதம் பாட.....
சந்ததாளம் போட......
இசையென வந்திடுவாய் இனிய பூங்குயிலே......
காந்தி மார்க்கெட்டில்
கழைக்கூத்தாடியின் துண்டு.....!
காந்தி ரோடு சிக்னலில்
கையில் குழந்தையுடன் தாய்.....!
கண்ணாடிக் கூண்டில்
கையில் குழந்தையுடன் மாதா......!
ஆம்.... தர்மம் வாழ்கிறது......
நீதிமன்றப் பூனை - 25.11.2021
மீதிக்கு தவிக்கிறது ஒரு வெள்ளைப்பூனை வெளியே.
நீதிக்கு தவிக்குது ஒரு கூட்டம் கருப்பு பூனை உள்ளே....